states

img

மத்தியப் பிரதேச பாஜகவின் 220 மாத ஆட்சியில் 225 ஊழல்கள்

போபால், ஜூன், 12- மத்தியப் பிரதேச பாஜகவின் 220 மாத ஆட்சியில் 225 ஊழல்கள் அரங்கேற்றப்பட்டுள்ளது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டி யுள்ளார். மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடப்பாண்டு இறுதியில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி தற்போதே தேர்தல் பிரச்சாரத்தை துவங்கி யுள்ளது. இந்த தேர்தல் பிரச்சார துவக்க கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறிய தாவது, “மத்தியப் பிரதேசத்தில் 220 மாத ஆட்சியில் 225 ஊழல்களை பாஜக அரசு செய்துள்ளது. அதா வது சராசரியாக ஒரு மாதத்திற்கு  ஒரு ஊழல் நிகழ்வு அரங்கேற்றப் பட்டுள்ளது. தேர்தலில் வாக்குறுதி களை அளித்து வெற்றி பெறும் பாஜக, அதனை நிறைவேற்றுவதில்லை. பிரதமர் மோடியின் முறைகேடுகளை விட முதல்வர் சிவராஜ் சிங் சவு கானின் ஊழல் பட்டியல் நீளமானது. எங்கள் கட்சி (காங்கிரஸ்) என்ன வாக்குறுதிகளை அளித்ததோ, அவற்றை சத்தீஸ்கர் மற்றும் இமாச்சலப்பிரதேசத்தில் நிறை வேற்றியுள்ளோம். காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் நிலையைப் பாருங்கள் உங்களுக்கே புரியும். மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், பல்வேறு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. மத்திய பிரதேசத்தில் பாஜக தேர்தலின் போது அறிவிப்புகளை வெளியிடுகிறார்கள், ஆனால் நிறைவேற்றவில்லை. டபுள் எஞ்சின், டிரிபிள் எஞ்சின் என்று பேசுகிறார்கள்.  இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா  ஆகிய மாநிலங்களிலும் இதையே தான் சொல்கிறார்கள். ஆனால் அதற்கு பொதுமக்கள் சரியான பாடத்தை காட்டியுள்ளனர்” இவ்வாறு அவர் கூறினார்.